சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘மெர்சல்’
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல்’.
ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர்.
இந்தப் படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பே படத்துக்கு விளம்பரமாகவும் அமைய நல்ல வசூல் கிடைத்தது.
அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது.
சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளதாம்.
‘தங்கல்’, ‘பாகுபலி’ போன்ற இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய வரவேற்பு கிடைத்திருந்த்து.
சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘மெர்சல்’ என்பது குறிப்பிடத்தக்கது.